shadow

Divorce Decreeநடிகர் சங்கத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தால் சங்கத்தில் இருந்து நடிகர் விஷாலை தூக்கி எறியவும் தயங்க மாட்டோம் என நேற்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் விடுத்த எச்சரிக்கைக்கு இன்று பதிலளித்துள்ள நடிகர் விஷால், எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

நேற்று திருச்சியில் பேட்டியளித்த சரத்குமார், ‘கடனில் இருந்த நடிகர் சங்கம் நிர்வாகிகளின் திறமையான நிர்வாகத்தினால் தற்போது போதுமான பணம் கையிருப்பு இருக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. சங்கத்தில் என்ன நடக்கின்றது என்பது தெரியாமல் வெளியில் இருந்து அவதூறாக இனியும் பேசினால் விஷாலை நடிகர் சங்கத்தில் இருந்து தூக்கி எறியவும் தயங்க மாட்டோம் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள விஷால், ‘நடிகர் சங்கம் என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றேன். ஆனால் என்ன அவதூறாக பேசினேன் என்பதை சங்கத்தலைவர் சரத்குமார் நிரூபிக்க வேண்டும். அதே நேரத்தில் நடிகர்கள் என்று கேவலமாக பேசிய ராதாரவி, கே.என்.காளை மீது சரத்குமார் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.

அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு நடிகர் சங்கத்தில் இருந்து குமரிமுத்துவை நீக்கியதை போல ராதாரவியை ஏன் நீக்கவில்லை என்பதை நடிகர் சங்கம் விளக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply