இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் “ஏய்”. இதில் சரத்குமார், நமீதா, வடிவேலு, கலாபவன் மணி ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு மிலிட்டரி அதிகாரிக்கும், உள்ளூர் போலீஸ்காரர் ஒருவருக்கும் ஏற்படும் பிரச்சனையே இந்த படத்தின் கதை. விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படம் நல்ல வசூலை கொடுத்தது.

தற்போது இயக்குனர் வெங்கடேஷ் ‘ஏய்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.அதற்கான திரைக்கதையையும் தயார் செய்து சரத்குமாரின் அனுமதியையும் பெற்றுவிட்டார். முதல் பாகத்தில் நடித்த சரத்குமார், நமீதா, வடிவேலு ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் சரத்குமார் நான்கு வேடங்களில் நடிப்பதாகவும், ஓவ்வொரு வேடமும் வித்தியாசமான மேக்கப்பிலும் வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக தசாவதாரம் படத்தில் பணிபுரிந்த ஹாலிவுட் மேக்கப்மேன் வரவழைக்கப்படுகிறார். மேலும் நமீதா தவிர இன்னும் இரண்டு கதாநாயகிகள் தேர்வு நடந்து வருகிறது.

முதல்பாகத்தில் இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா, இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் அனைவரும் வரும் ஜனவரிக்குள் முடிவு செய்யப்பட்டு, பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் முறையான அறிவிப்பு வரும் பொங்கல் நாளில் வெளிவர இருக்கின்றது.

Leave a Reply