shadow

santhanam

கோச்சடையான் படத்தின் ரிலீஸ் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் காமெடி நடிகர் சந்தானம் குஷியாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்தானம் முதன்முதலில் கதாநாயகனாக நடித்து வெளியாகவுள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைப்படம் கோச்சடையான் ரிலீஸ் காரணமாக தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் இருந்தது. ஆனால் தற்போது கோச்சடையான் ரிலீஸ் திடீரென நிறுத்தப்பட்டதால், சென்னை உள்பட அனைத்து தியேட்டர் அதிபர்களும், சந்தானத்தின் திரைப்படத்தை திரையிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.,

இதனால் நேற்று முதல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைபப்டத்திற்கு அதிக தியேட்டர்கள் புக் ஆகிக்கொண்டே இருக்கிறது. முதலில் மே 16ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்த சந்தானம், கோச்சடையான் தாமதத்தால் தற்போது மே 10ஆம் தேதியே ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.  எதிர்பார்த்ததை விட அதிக தியேட்டர்கள் புக் ஆகியுள்ளதால் சந்தானம் மிகவும் குஷியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply