சங்ககிரியில் பழைய இடைப்பாடி ரோடு வாணியர்காலனி பகுதியில் ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி அக்னி கரகம் எடுத்து அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.