மீண்டும் இணையும் சமுத்திரக்கனி-சசிகுமார்
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் ஏற்கனவே ‘நாடோடிகள்’ மற்றும் ‘போராளி’ ஆகிய படங்கள் நடித்திருக்கும் நிலையில் மீண்டும் ஒரு படம் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
வெற்றிமாறனின் விசாரணை, தனுஷின் அம்மா கணக்கு’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமுத்திரக்கனி விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சசிகுமார் தற்போது ‘வெற்றிவேல்’ என்ற படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ‘அப்பா’ என்ற படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இந்த படம் ஒரு அப்பா தனது குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து உணர்வுபூர்வமாக விளக்கப்பட்டிருக்கின்றதாம். இந்த படம் மறைந்த இயக்குனர் திலகம் கே.பாலசந்தருக்கு சமர்ப்பணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.