shadow

 salman and modiபிரதமர் நரேந்திர மோடியை நேற்று பாலிவுட் நடிகர் சல்மான்கான் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அண்மையில் “தூய்மை இந்தியா” திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதை முன்னோக்கி செயல்படுத்த பிரதமர் நியமித்த 9 பிரபலங்க பிரபலங்களில் சல்மான் கானும் ஒருவர்.

இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்வதற்காகவும், இம்மாதம் நடைபெற உள்ள தனது சகோதரி அர்புதா கான் திருமணத்திற்கு வருகை தருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுவிக்க நேரில் சந்தித்ததாக கூறப்படுகிறாது.

மேலும் சல்மான்கான் குடிபோதையில் கார் ஓட்டிய விவகாரம் குறித்த வழக்கில் தீர்ப்பு வரும் நிலையில் அவர் திடீரென பிரதமரை சந்தித்துள்ளதால் டெல்லி வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் டெல்லி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply