shadow

11aa copyதேர்தல் முடிந்ததும், நேற்று முதல் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான உடனே சேலம் உள்பட 3 மாவட்ட ஆட்சித் தலைவர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழகத்தில் சேலம்,வேலூர் மற்றும் ஈரோடு ஆட்சித்தலைவர்கள் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஆட்சியராக பணியாற்றி வந்த ஹனீஷ் சாப்ரா, தொழிற்துறை துணைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கே.மகரபூஷணம் சேலம் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படடுள்ளார்.

அதேபோல், வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திர ரத்னூ, தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நந்தகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.மதுமதி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வி.கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply