கொரோனா வைரஸ் எதிரொலி, ஒரு மாத சம்பளம் கிடையாது: முதல்வர் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் தெலுங்கானா முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

இதன்படி முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர்களுக்கு 75 சதவீதம் சம்பளம் கட் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளுக்கு 60 சதவீத கட் என்றும், மற்ற பிரிவு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளம் கட் என்றும், நான்காம் வகுப்பு, அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, 10 சதவீத சம்பளம் கட் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply