shadow

பிக்பாஸ் புகழ் டிரிகர் சக்தி மன்னிப்பு கேட்டது ஏன்?

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாட்டாமைகளில் ஒருவரான டிரிக்கர் சக்தி வெளியேற்றப்பட்டவுடன் கிட்டத்தட்ட பாதி பிரச்சனைகள் அந்த வீட்டில் குறைந்துவிட்டது. இந்த வாரம் காயத்ரியும் வெளியேறிவிட்டால் வீடு சுத்தமாகிவிடும் என்று கருதப்படுகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சக்தி வீட்டுக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து எபிசோடுகளையும் பார்த்தது தான். அப்போதுதான் ஓவியாவுக்கு வெளியே எந்த அளவுக்கு மதிப்பு உள்ளது என்பதும், தன்னை எத்தனை பேர் வெறுத்து ஒதுக்கியுள்ளனர் என்பதும் தெரியவந்ததுள்லது. அதிலும். குறிப்பாக பெண்கள் குறித்து அவர் பேசிய கருத்துக்களுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதை பார்த்து சக்தி அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.

இந்த நிலையில் உடனடியாக சக்தி தனது ஃபேஸ்புக்கில் பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அவர் பதிவு செய்த ஒரு ஸ்டேட்டஸில், ‘பெண்களை தான் என்றும் மதிப்பவன் என்றும், பெண்களுக்கு எதிராக தான் என்றுமே பேசியதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த பதிவின் கமெண்ட் பாக்ஸில் ஓவியா ஆர்மியினர் கடுமையான சொற்களை கொண்டு அவரை விமர்சனம் செய்ததால் உடனே அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.

Leave a Reply