shadow

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ்

கடந்த ஐந்து நாட்களாக ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து தரப்பினர்களும் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் இன்று போராட்ட களத்திற்கு நேரில் வந்த சகாயம் ஐஏஎஸ் மாணவர்களின் போராட்டத்தை பாராட்டினார்.

இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த அப்துல்கலாம் மறைவிற்கு பின்னர் இளைஞர்களை பெரிதும் கவர்ந்த சகாயம், அவர்களுக்கு போராட்டக்குழுவினர் சிவப்புக்கம்பளம் கொடுத்து உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். சகாயம் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

சமீபத்தில் நாமக்கல் பகுதியில் நடந்த பொங்கல் விழா ஒன்றில் ‘ஜல்லிக்கட்டு’ நமது பாரம்பரியம், அதை விட்டுக்கொடுக்க கூடாது என்று உணர்ச்சியுடன் பேசியவர் சகாயம் ஐஏஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply