shadow

ராகுல்காந்திக்கு துணைவியாவது கிடைக்கட்டும்: பிரார்த்தனை செய்த பெண் துறவி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பிரதமர் பதவிதான் கிடைக்கவில்லை குறைந்தபட்சம் அவருக்கு துணைவியாவது கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்ததாக பெண் துறவி சாத்வி பிராச்சி என்பவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண் துறவி சாத்வி பிராச்சி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று உபி மாநிலத்தில் உள்ள கோரக்நாத் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்த சாத்வி அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ராகுல்காந்திக்கு துணைவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்ததாகவும், ஆட்சியை பிடித்து பிரதமர் ஆக முடியாது என்றாலும் இதுவாவது அவருக்கு கிடைக்கட்டும் என்றும் கூறினார்.

சாத்வியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அசோக் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவொரு அருவருக்கத்தக்க செயல் என்றும் ராகுல்காந்தி குறித்து ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் கூறி விளம்பரம் தேடிக்கொள்வது தற்போது டிரெண்டாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply