shadow

‘சாமி 2’ கதை என்ன? இணையத்தில் கசிந்த தகவல்

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படத்தில் பெருமாள் பிச்சையை சாமி கிளைமாக்ஸில் கொலை செய்யப்படுவது போல் காட்சிகள் இருக்கும். இந்த நிலையில் ‘சாமி 2’ படத்தில் தந்தை பெருமாள் பிச்சையை கொலை செய்த ஆறுச்சாமியின் மகனான ராமசாமி பிச்சையை அவரது மூன்று மகன்கள் பழிவாங்க துடிப்பதே இந்த படத்தின் கதை என்று இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

பெருமாள் பிச்சைக்கு மூன்று மகன்கள் இருப்பதாகவும், அவர்கள் ராவண பிச்சை, தேவேந்திர பிச்சை, மகேந்திர பிச்சை என்றும் இவர்கள் மூவரும் தனது தந்தையை கொன்ற ஆறுசாமியின் மகனான ராமசாமியை பழிவாங்குவதே படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது

ஆறுச்சாமிக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவுக்கு இந்த படத்தில் அம்மா வேடம் என்பதாலும் சில நிமிடங்களே வரும் தோற்றம் என்பதாலும் அவர் சாமி-2 படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் சாமி ஸ்கொயர் படத்தின் டீசர் வெளியாகி பெரும்பாலான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் படம் முதல் பாகத்தை விட விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply