நீண்ட இடைவெளிக்கு பின்னர் எஸ்.ஜே.சூர்யா இசையமைத்து நடித்த ‘இசை’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதே சுறுசுறுப்பில் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க அவர் முடிவு செய்துள்ளார். இந்த படத்தின் பெயர் ஏழுமலை சித்ரா என்ற வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வேளாண்மை பட்டதாரியான ஏழுமலைக்கும், கல்லூரி மாணவி சித்ராவுக்கும் இடையில் நடக்கும் காதல்தான் படத்தின் கரு. இப்படத்தில் ஏழுமலை கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவே நடிக்கவிருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் சித்ரா கதாபாத்திரத்திற்கு ஹன்சிகா அல்லது தமன்னாவை நடிக்க வைக்க சூர்யா முயற்சி செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யாவின் படத்தில்தான் ஏற்கனவே தமன்னா வியாபாரி’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஜே.சூர்யா தற்போது ‘இசை’ படத்தின் தெலுங்கு டப்பிங் வேலைகளில் பிசியாக இருக்கிறார். இது முடிந்ததும் ‘ஏழுமலை சித்ரா’ படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.