ரஷ்யாவில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது. 91 பேர் பலியா?
ரஷியா நாட்டில் உள்ள சோச்சி நகரில் இருந்து 83 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் என 91 பேர்களுடன் சென்ற விமானம் சோச்சி கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் கதி என்ன என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய விமானம் Tu-154 கருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென ரேடார் தொடர்பில் இருந்து விலகியதாகவும், அதன் பின்னர் அந்த விமானம் மாயமானதாகவும், பின்னர் தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பின்னர் அந்த விமானம் கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி கடலோர பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
விமானத்தின் சிதறி கிடக்கும் பாகங்களை வைத்து அந்த இடத்தை அடையாளம் கண்ட மீட்புக் குழுவினர், விமானத்தில் சென்றவர்கள் யாரும் உயிருடன் இருக்கின்றார்களா? என்பதை தேடி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.