shadow

dilip kumarபிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் மரணம் அடைந்துவிட்டதாக நேற்று இரவு முதல் டுவிட்டரிலும், வாட்ஸ் அப்பிலும் வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சல்மான்கானின் தங்கை திருமணத்தில் கலந்து கொண்ட பழம்பெரும் நடிகர் திலீப்குமாருக்கு நேற்று திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டதாகவும், அவருக்கு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்துவிட்டதாக டுவிட்டரிலும், வாட்ஸ் அப்பிலும் வதந்திகள் மிகவேகமாக பரவியது.

ஆனால் திலீப்குமார் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி சாய்ரா பானு உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வதந்தி எங்கிருந்து கிளம்பியது என்றே தெரியவில்லை. ஒருசில நிமிடங்களில் ஆயிரக்கணக்கானோர் டுவிட் செய்ததால் பாலிவுட் படவுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில்தான் இவ்வாறு பொறுப்பின்றி வதந்தி பரப்புகின்றனர் என்றால் பொறுப்புள்ள சில பத்திரிகைகளும் திலீப்குமார் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழில் முன்னணியில் இருக்கும் ஒரு நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply