ருத்ரம்மா தேவி படத்தில் நடித்து வரும் அனுஷ்காவின் பலகோடி மதிப்புள்ள நகைகள் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் திருடு போனது. தற்போது அந்த நகைகளை போலீஸார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபலமான நகைக்கடையான நாதெள்ள ஆஞ்சநேய செட்டி நகைக்கடையில் பணிபுரியும் ஊழியர் ரவி சுப்பிரமணியம் என்பவரை போலீஸார் கைது செய்து அவரது வீட்டை சோதனையிட்ட போது, திருடுபோன பத்து கிலோ நகைகளும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் பணிபுரியும் கடை முதலாளிதான் தன்னிடம் இந்த நகைகளை கொடுத்து வைத்ததாக கூறினார். ஆனால் அவர் கூறிய தகவல் பொய் என்பது சிறிது நேரத்தில் விசாரணையில் தெரிந்தது.
ருத்ரம்மா தேவி படத்திற்காக அந்த படத்தின் தயாரிப்பாளர் சென்னையில் உள்ள நாதெள்ள ஆஞ்சநேய செட்டி நகைக்கடையில் தான் பலகோடி மதிப்புள்ள நகைகள் செய்ய ஆர்டர் கொடுத்தார். இந்த கடையில் பணிபுரிந்த ஊழியர் ரவி சுப்பிரமணியம் திட்டம் போட்டு ருத்ரம்மாதேவி படக்குழுவினர்களோடு நட்பு ஏற்படுத்தி, நகைகளை திருடுவதற்கு திட்டம் போட்டது தற்போது தெரியவந்துள்ளது. இந்த திருட்டுக்கு படக்குழுவில் உள்ள ஒருசிலரும் உடந்தை என்பது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ரவிசுப்பிரமணியத்திடம் மேலும் விசாரணை நடைபெறுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.