shadow

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு ராகுல்காந்தி அழைப்பா?

திமுக நடத்தும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அமித்ஷா அழைக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் நிகழ்ச்சி ஒன்றுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டெல்லி விஞ்ஞான் பவனில், ஆர்.எஸ்.எஸ். சார்பில், ‘பாரதத்தின் எதிர்காலம்: ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்வை’ என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் அழைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதும் அவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply