shadow

vaikoமதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள பணமாலையாக அணிவித்து கெளரவப்படுத்தியுள்ளார் தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ஜோயல்.

மதிமுகவின் 23வது மாநில பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட செயலாளர் ஜோயல் மிக பிரமாண்டமாக செய்திருந்ததோடு, தூத்துக்குடி முழுவதிலும் உள்ள சாலைகளில், பேனர்கள், கட்அவுட்டுகள் என வைத்து தனது செல்வாக்கை நிரூபித்தார்.

இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு வந்த வைகோவை அதிரடியாக வரவேற்க முடிவு செய்த ஜோயல், ஐந்து லட்சம் மதிப்புள்ள பணமாலையை வைகோவுக்கு அணிவித்தார். முழுக்க முழுக்க 100 ரூபாய் நோட்டுக்களால் இந்த பணமாலையாக அமைக்கப்பட்டிருந்தது.

ஜோயல் மீது வைகோவுக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. உடன்குடி அருகே உள்ள லெட்சுமிபுரத்தை சேர்ந்த ஜோயல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.

கடந்த 15 ஆண்டு காலமாக மாவட்ட செயலாளராக இருக்கும் இவர், தென் மாவட்டங்களில் கட்சியை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். வைகோ தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தால் அவருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து அசத்தும் ஜோயல் தற்போது, பண மாலையால் வைகோவை பிரமிக்க வைத்துள்ளார்.

Leave a Reply