இணையதளங்களின் தேடுபொறியில் கூகுள் நிறுஅனம் அத்துமீறி தனது ஆதிக்கத்தை செலுத்தி வருவதாக இந்திய வர்த்தக போட்டி உறுதி ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கூகுள் இணைதள் தேடுபொறி நிறுவனம், இந்தியாவில் தேடுபொறி சந்தையில் சட்டவரம்பை மீறி ஆதிக்கம் செலுத்துவதாக ஏற்பட்டுள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரணை செய்ய உத்த்ரவு இடப்பட்டுள்ளது. இந்த புகார் உறுதி செய்யப்பட்டால் கூகுள் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.