shadow

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் புதுவையில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது

மேலும் மழையால் பாதிப்படைந்த விளைநிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும்

மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மீனவர்கள் ஆகியோர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய் 5000 வழங்கப்படும் என புதுவை அரசு தெரிவித்துள்ளது