குடும்பத்துடன் பிளாட்பாரத்தில் வாழ்ந்த மிகவும் ஏழை குடும்பத்தலைவர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.17 கோடி பரிசு விழுந்துள்ளது. இந்த சம்பவம் ஹங்கேரி நாட்டில் கயோர் என்ற பகுதியில் நடந்துள்ளது.

ஆண்ட்ராஸ் செக் என்ற 55 வயது நபர் மிகவும் ஏழ்மையானவர். இவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். சொந்த வீடு கூட இல்லாமல் பிளாட்பாரத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். இவர் கடந்த வாரம் தன்னிடம் செலவு செய்த பணம் போக மீதி இருந்த கடைசி பணத்தில் ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.17 கோடி விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்.

தனக்கு கிடைத்த லாட்டரி பணத்தில் தனது மூன்று குழதைகளுக்குm வீடுகள் வாங்கித்தரவும், எல்லா கடன்களையும் அடைத்துவிட்டு இத்தாலிக்கு சுற்றுலா செல்லவும் முடிவு செய்திருப்பதாக கூறினார்.

மேலும் லாட்டரியில் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை பிளாட்பாரத்தில் கஷ்டப்படும் ஏழை எளியோருக்காக ஒரு டிரஸ்ட் அமைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.

Leave a Reply