shadow

Pepsi IPL 2015 - M40 RCB v KXIPஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றை போட்டியில் பல தோல்விகளை சந்தித்து வரும் பஞ்சாப் அணி, மிக கேவலமான தோல்வியை அடைந்தது. இந்த அணி பெங்களூர் அணியிடம் 138 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெங்களூர் அணியின் கிறிஸ்ட் கெய்ல் அடித்த ரன்களை பஞ்சாப் அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் சேர்ந்து அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததால், பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியின் கிறிஸ்ட் கெய்ல் விஸ்வரூபம் எடுத்தார். அவர் 57 பந்துகளில் 12 சிக்சர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்தார். விராத் கோஹ்லி 32 ரன்களும், டிவில்லியர்ஸ் 47 ரன்களும் எடுத்ததால் அந்த அணி 20 ஓவர்களில் 226 ரன்கள் குவித்தது.

227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி, முதல் ஓவரிலேயே வோராவின் விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் வந்த பேட்ஸ்மேன்களும் பொறுப்பாக ஆடாததால் அந்த அணி 13.4 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பட்டேல் மட்டும் 40 ரன்கள் எடுத்தார்.,

ஆட்டநாயகனாக கிறிஸ்ட் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி 11 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply