shadow

227240-hayeபாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவை சிறையில் தள்ளுவேன் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த பெண் தலைவர் உமாபாரதி என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருகமனும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, நில ஒப்பந்தங்கள் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பல கூட்டங்களில் பேசி வருகிறார். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த பெண் தலைவர் உமாபாரதி இன்று ஜான்சியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்யும் முதல்வேலை சோனியாவின் மருமகனை சிறையில் தள்ளுவதுதான்” என ஆவேசமாக பேசியுள்ளார்.

உமாபாரதியின் இந்த ஆவேச பேச்சு காங்கிரஸ் கட்சியினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா தலைவர்கள் மீது புகார் அளிக்க உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர்களின் ஒருவரான திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply