shadow

ajithஅஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் U/A சர்டிபிகேட் கொடுத்த நிலையில் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப அதன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முடிவு செய்து அதற்கு விண்ணப்பமும் செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று ‘என்னை அறிந்தால்’ படம் ரிவைசிங் கமிட்டியினர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. ஆனால் ரிவைசிங் கமிட்டியினர் இந்த படத்திற்கு U/A சர்டிபிகேட் கொடுத்தது சரிதான் என்றும், படத்திற்கு U சர்டிபிகேட் வழங்க முடியாது என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது.

இதனால் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி U/A சர்டிபிகேட்டுடன் வெளியாக உள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியில் இருந்த தயாரிப்பாளருக்கு அஜீத் தரப்பில் இருந்து ஆறுதல் கூறியதாகவும், வரிச்சலுகை கிடைக்காவிட்டால் பரவாயில்லை நம் ரசிகர்களின் அன்புச்சலுகையால் படம் மாபெரும் வெற்றி பெற்றுவிடும் என்று ஆறுதல் கூறியதாக டுவிட்டரில் செய்தி வெளியாகியுள்ளது.அஜீத்தின் நம்பிக்கையான வார்த்தைகளால் தயாரிப்பு தரப்பு திருப்தி அடைந்ததாகவும், படத்திற்கு இருந்த கடைசி தடையும் அஜீத்தால் உடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அஜீத்தின் நல்ல மனதிற்காக இந்த படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெற்று, தயாரிப்பாளர், மற்றும் இயக்குனரை மகிழ்விக்கும் என கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply