shadow

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெய்ஸ்ரீ முரளிதரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த திறப்புவிழாவை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று ரெங்கநாதனை தரிசித்து அருள் பெற்றனர்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியினை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. சுமார் 3 ஆயிரம் போலீசார் கோவில் வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 24 இடங்களில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply