விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் “ஐ” படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார். ஆனால் இந்த படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே ரூ.150 கோடி வரை செலவு செய்துவிட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரன் இன்னும் சில கோடிகள் படத்தை முடிக்க தேவை என்பதால் படத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுவிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் இருவேடங்களில் நடிக்க, இருக்க இந்த படம் குறித்து கடந்த இரண்டு நாட்கள் முன்பு லிங்கா படத்தின் படப்பிடிப்பின் இடையே ஷங்கர் ரஜினியுடன் ஷங்கர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறதுரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் முடிவு செய்யப்பட்டால், ஷங்கரின் ‘ஐ’ மற்றும் எந்திரன் 2 ஆகிய இரண்டு அடுத்தடுத்த படங்களை ரிலையன்ஸ் தயாரிப்பது உறுதியாகிவிடும்.
Leave a Reply
You must be logged in to post a comment.