shadow

எதிர்பார்த்த மெம்பர்ஷிப் இல்லையா? ஜியோ இலவச சேவை மீண்டும் நீடிப்பு

தொலைத்தொடர்பு உலகில் 4G என்ற புரட்சியை செய்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இலவச சேவை நேற்றுடன் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென இந்த சேவை ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ வாடிக்கையாளர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் மெம்பர்ஷிப் ஆக வேண்டும் என்றும் அதன்பின்னர் தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் ஜியோ அறிவித்திருந்த நிலையில் எதிர்பார்த்த மெம்பர்ஷிப் கிடைக்கவில்லை. இலவச சேவையை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும் மனப்பான்மையே பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் இருந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலவச சேவையை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 15-க்குள் ரூ.303 செலுத்தினால் 3 மாதங்களுக்கு இலவச சேவை என தகவல் வெளியாகியுள்ளது .

Leave a Reply