சாம்சங்-ஜியொ புதிய கூட்டணி. விரைவில் அறிமுகமாகிறது 5ஜி சேவை
இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெரும்பாலானோர் 2ஜி சேவையை மட்டுமே பயன்படுத்தி கொண்டிருந்த நிலையில், பொதுமக்களை திடீரென 4ஜி சேவைக்கு மாற்றிய பெருமை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவுக்கு போய் சேரும்
இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ, தென்கொரியாவின் ஸ்மார்ட்போன் ஜாம்பவானான சாம்சங் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன்படி ரிலையன்ஸ் ஜியோவுக்காக சாம்சங் நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போனை தயாரித்து தரவுள்ளது.
எனவே சாம்சங் மற்றும் ஜியோவின் கூட்டணியால் வெகுவிரைவில் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே 4ஜி சேவையிலேயே படு ஸ்பீடான இண்டர்நெட் வழங்கப்பட்டு வரும் நிலையில் 5ஜி என்பது வாடிக்கையாளர்களுக்கான வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.