பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெக்ரிக்-–-இன்சாப் என்ற கட்சியின் நிறுவனருமான இம்ரான்கான் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரீகம் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் கராச்சியில் நடந்த கட்சி பேரணியில் இம்ரான்கானுடன் கலந்து கொண்ட அவரது மனைவி ரீகம் விரைவில் பாகிஸ்தான் அரசியலில் ஈடுபடுவார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுகுறித்த செய்திகளுக்கு விளக்கம் கூறிய ரீகம், “எனது கணவர் இம்ரான்கானின் அனைத்து நடவடிக்கைகளூக்கும் நான் உறுதுணையாக இருப்பேன். அரசியலில் அவர் மிக உயரமான இடத்துக்கு செல்ல உதவிகரமாக இருப்பேன்’’ என்று கூறினார்.
அதை தொடர்ந்து நீங்கள் அரசியலில் ஈடுபடுவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த ரீகம் கான். ‘‘நான் எப்போதும் இம்ரான்கானுடன் தானே இருக்கிறேன். பாகிஸ்தான் மக்கள் இந்த முறை தவறு செய்ய மாட்டார்கள். நிலைமையை அறிந்து இம்ரான்கானுக்கே தங்கள் ஆதரவை ஓட்டு மூலம் அளிப்பார்கள்’’ என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.