கடற்கரையில் செத்து ஒதுங்கிய கர்ப்பமான சுறா மீன் ஒன்றின் வயிற்றை கத்தியால் கீறி அதன் வயிற்றில் இருந்து குட்டி சுறா மீன்களை காப்பற்றியது குறித்து வீடியோ ஒன்று தற்போது ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் மிக வேகமாக பரவி வருகின்றது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் கடற்கரையில் நேற்று மாலை கர்ப்பமாக இருந்த சுறா மீன் ஒன்று செத்து ஒதுங்கியது. ஆனால் அதன் வயிற்றில் இருந்த குட்டிகள் துடித்துக்கொண்டிருந்ததை பார்த்த கடற்கரையில் இருந்த சிலர் உடனடியாக ஒரு கத்தியை எடுத்து செத்து கிடந்த சுறாவின் வயிற்றை கத்தியால் கீறி அதில் இருந்த இரண்டு குட்டிகளை உயிருடன் காப்பாற்றினார்கள். அதன்பின்னர் அந்த சுறாக்குட்டிகள் கடலுக்குள் விடப்பட்டது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1CLdiq1″ standard=”//www.youtube.com/v/BotR4hmrtR0?fs=1″ vars=”ytid=BotR4hmrtR0&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep9012″ /]
இதுகுறித்து வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது. நமது சென்னை டுடே நியூஸ் வாசகர்களுக்காக அந்த வீடியோவை இங்கு பதிவு செய்கிறோம்.
Leave a Reply
You must be logged in to post a comment.