பதிவுத்திருமணம் கட்டாயம். உ.பி அரசின் அடுத்த அதிரடி
உ.பி. முதல்வராக ஆதித்யநாத் யோகி பொறுப்பேற்றது முதலே அம்மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது அடுத்த அதிரடியாக உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் மத பாகுபாடின்றி பதிவு செய்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி அறிவிப்பை சற்று முன்னர் தெரிவித்த மகளிர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ரீட்டா பகுகுணா ஜோஷி இதுதொடர்பான சட்ட மசோதா விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்தபின்னர், திருமணத்தை பதிவு செய்யத் தவறும் தம்பதிகளுக்கும் அரசின் நலத்திட்டங்களின் சலுகைககள் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணப் பதிவை கட்டாயமாக்கி சட்டம் இயற்றுவது தொடர்பாக ஜோஷி மேலும் கூறும்போது, “உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி திருமணங்களைப் பதிவு செய்வது கட்டாயம். ஆனால், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் இதை சீர்படுத்த விரும்புகிறோம்” என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.