தேவையான பொருட்கள் :
சிவப்பரிசி – 1 கப்
பச்சரிசி – 1 கப்
முடக்கத்தான் கீரை – 1 கட்டு
உளுந்து – கால் கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
• சிவப்பரிசி, பச்சரிசி, உளுந்தை 2 மணிநேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து உப்பு கலந்து புளிக்க வைக்கவும்.
• முடக்கத்தான் கீரையை நன்றாக கழுவி மிக்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
• புளித்த மாவில் அரைத்த கீரையை நன்றாக கலந்து கொள்ளவும்.
• தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
• இந்த சிவப்பரிசி – முடக்கத்தான் தோசை மிகவும் சத்து நிறைந்தது.
• கால் மூட்டு வலி உள்ளவர்கள் முடக்கத்தான் கீரையை 3 மாதம் தொடர்ந்து தினமும் உணவில் சேர்த்து வந்தால் மூட்டு வலி தீரும்.
Leave a Reply
You must be logged in to post a comment.