shadow

விருத்தாச்சலம் கூட்டதில் இருவர் மரணத்திற்கான காரணம் என்ன? முதல்வர் விளக்கம்
jayameeting6001
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று விருத்தாச்சலம் நகரில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் இடிபாடுகளுக்கு இடையே இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும், இருவரின் மரணத்திற்கு ஜெயலலிதாவே காரணம் என்றும் பாமக நிறுவனர் ராம்தாஸ் உள்பட பல தலைவர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இருவரது மரணத்திற்கு என்ன காரணம் என்று ஜெயலலிதா அரிக்கை ஒன்றில் விளக்கியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:  “கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்துல் கலந்து கொண்ட சிதம்பரம் நகர 31-வது வார்டைச் சேர்ந்த எஸ்.கருணாகரன், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரைச் சேர்ந்த எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

கருணாகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது தேர்தல் நடத்தை, விதிமுறைகள் அமலில் இருப்பதால், மரணம்டைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேர்தல் முடிந்த பிறகு கழகத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply