எந்த விசாரணைக்கும் தயார்: ஜெயலலிதா சிகிச்சை அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி பேட்டி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று அதன் பின்னர் சிகிச்சையின் பலனின்றி கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.
இதனையடுத்து, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஓபிஎஸ் அணி உள்பட பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த விவகாரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த எந்த விசாரணைக்கும் தயார் என்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதா சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை. சிறப்பான சிகிச்சை அளித்தோம். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைக்கான ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. சிகிச்சை அளிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை” என்று தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.