shadow

re one currencyகடந்த 1994ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட ஒரு ரூபாய் கரன்சி இன்று முதல் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டினை மத்திய அரசு 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக, சில்லரை தட்டுப்பாட்டைப்  போக்க ஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் அச்சிட மத்திய அரசு முடிவு செய்தது.

இன்று வெளியான இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டை உதய்ப்பூர் அருகே நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் நிதித்துறை செயலாளர்  ராஜீவ் மெஹ்ரிஷி வெளியிட்டார். இதை முன்னிட்டு ஸ்ரீநாத்ஜி சுவாமியின் பாதத்தில் 100 நோட்டுகள் கொண்ட ஒரு ரூபாய் நோட்டு கட்டை வைத்து வழிபட்டார். அவருடன் மனைவி மீரா மெஹ்ரிஷியும் உடன் வந்திருந்தார்.

ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க அதிக செலவான காரணத்தால் ரூபாய் நோட்டிற்கு பதிலாக கடந்த பல வருடங்களாக நாணயங்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது. இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டு 9.7 செ.மீ நீளமும் 6.3 செ.மீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது.

Leave a Reply