கொரோனா தடுப்பு நடவடிக்கை நிதி: ராஜீவ் கொலையாளி கொடுத்த ரூ.5 ஆயிரம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேர் சிறையில் வாடுகின்றனர் என்பது தெரிந்ததே. இவர்களை விடுதலை செய்ய தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் ரவீந்திரன் என்பவர் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக தனது சேமிப்பான ரூபாய் 5 ஆயிரத்தை வழங்கியுள்ளார்

இந்த பணத்தை அவர் தமிழக அரசுக்கு தனது வழக்கறிஞர் மூலம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்தபோதும் நாட்டு மக்களை காப்பதற்காக அவரால் இயன்ற உதவியை செய்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது

Leave a Reply