ரவிகுமார் எம்பி கேள்வி
டாஸ்மாக் மேல்முறை செய்த தமிழக அரசை எச்சரித்த ரஜினிகாந்த், நாடு முழுவதும் மதுக்கடைகளை திறக்கலாம் என அனுமதி அளித்த மத்திய அரசை ஏன் எச்சரிக்கவில்லை என ரவிக்குமார் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக்கை மூட உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது: இதுகுறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டரில் ‘இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்’ என்று தெரிவித்திருந்தார்
ரஜினியின் இந்த டுவீட் குறித்து கருத்து கூறிய விடுதலைச்சிறுத்தைகள் எம்பி ரவிகுமார் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் விவகாரம் குறித்த ரஜினிகாந்த் அவர்களின் அறச்சீற்றம் உண்மையென்றால் நாடு முழுவதும் மதுக்கடைகளை திறக்கலாம் என அனுமதி அளித்த மத்தியில் ஆளும் பாஜக அரசை பார்த்தும் இதே எச்சரிக்கையை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.