தமிழகம் வந்தது ராமராஜ்ய ரதயாத்திரை: எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவர்கள் கைது
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது உள்பட பலவேறு கோரிக்கைகளை வலியிறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் உபியில் இருந்து ஆரம்பமான ராம ராஜ்ய ரத யாத்திரை ஐந்து மாநிலங்களை கடந்து இன்று காலை நெல்லை வழியாக தமிழகத்திற்கு வந்தது.
உத்தரபிரதேச ம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்த இந்த யாத்திரை இன்று நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக தமிழகத்திற்கு வந்தபோது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு தமிழக கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் நெல்லை மாவட்டத்தில் மார்ச் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
Leave a Reply
You must be logged in to post a comment.