ஒரு கல் ஒரு கண்ணாடி, மான் கராத்தே, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற பல வெற்றி படங்களில் நடித்த நடிகை ஹன்சிகாவின் அந்தரங்க வீடியோ சமீபத்தில் வெளியானதாக பரபரப்பான செய்தி வந்துள்ள நிலையில் அது மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோ என்று தெரிய வந்தது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த நடிகை ஹன்சிகா, மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை உருவாக்குபவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் கற்பழிப்பை விட மிக மோசமானது இந்த மார்பிங் வேலை என்றும் இத்தகைய இழிசெயலை செய்பவர்களை தண்டிக்கும் வகையில் கடுமையான சட்டம் தேவை என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனது அந்தரங்க வீடியோ மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோ என்று உறுதியானதால்தான் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
ஹன்சிகாவின் இந்த கருத்துக்கு பலர் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கற்பழிப்புதான் உலகில் மிக மோசமான குற்றம். மார்பிங் குற்றத்தை விட கற்பழிப்பு குற்றம் சாதாரணமானது என்ற கருத்தை ஹன்சிகா கூறியது தவறு என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.