shadow

ராஞ்சி ஒருநாள் போட்டி. இந்திய அணி போராடி தோல்வி

cricketஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ராஞ்சி மைதானத்தில் 4வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. தோனியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 260 ரன்கள் எடுத்தது. குப்தில் 72 ரன்களும், வில்லியம்சன் 41 ரன்களும் எடுத்தனர்.

261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, சீரான வரிசையில் விக்கெட்டுக்களை இழந்து 48.4 ஓவர்களில் 241 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது 2-2 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. குப்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply