ராம்குமார் சட்டையில் இருந்தது சுவாதி ரத்தமா?
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரிடம் இந்த கொலை வழக்கு குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ராம்குமாரின் அறையில் ரத்தம் படிந்த சட்டை ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும், அந்த சட்டை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் அதில் படிந்துள்ள ரத்தம் சுவாதியின் குரூப் ரத்தம்தான் என்பது தற்போது தடயவியல் சோதனையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவலை போலீஸார் உறுதி செய்யவில்லை.
ராம்குமாரின் ரத்தம் படிந்த சட்டையை ஐதராபாத்தில் உள்ள தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கான சோதனையை தடயவியல் துறையினர் செய்து வருவதாகவும் இதற்கான கால அவகாசம் அதிகமாக தேவைப்படும் என்றும் சென்னை மாநகர கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.