சுவாதி கொலையாளி செங்கோட்டையில் கைது. தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
தமிழகத்தையே உலுக்கிய ஐ.டி.பெண் ஊழியர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை நடந்து ஒருவாரம் ஆகிய நிலையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கொலையாளியை போலீஸார் நேற்று இரவு 11 மணிக்கு கைது செய்துள்ளனர்.
போலீஸார் கைது செய்தபோது கொலையாளி கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், இதன் காரணமாக கழுத்தில் படுகாயம் அடைந்த கொலையாளிக்கு செங்கோட்டை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
கொலையாளியின் பெயர் ராம்குமார் என்பது மட்டும் இப்போதைக்கு தெரிய வந்துள்ளது. ராம்குமார் குணமானதும் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என தெரிகிறது. இந்நிலையில் ராம்குமாரின் தாயார், சகோதரிகள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.