shadow

தர்மபுரி பொதுக்கூட்டத்தில் பிரேமலதாவை கிண்டல் செய்த ராமராஜன்.
ramarajan
‘உங்கள் திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்த கருணாநிதியை இப்படி திட்டலாமா? என பிரேமலதாவுக்கு கேள்வி எழுப்பியுள்ள நடிகர் ராமராஜன், என்னம்மா பிரேமும்மா..இப்படி பண்றிங்களேம்மா என நேற்று நடைபெற்ற தர்மபுரி கூட்டத்தில் கிண்டல் செய்தார். இது தேமுதிக தொண்டர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.

தர்மபுரியில் நடைபெற்ற அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய ராமராஜன், ” “ கரும்புத்தோட்டத்துக்குள்ள சிமெண்ட் சாலை போட்டு நடக்குற ஒரே ஆள் ஸ்டாலின்தான். ஷூ போட்டுக்கிட்டு வயலுக்குள்ள இறங்கி யாரை ஏமாத்துற…? முடியலைன்னா வீட்டுக்குள்ளயே இருக்கவேண்டியதுதானே. ஸ்டாலின் போய் தெருவோரக்கடையில தோசை சாப்பிடுகிறாராம். அங்க நீங்க சாப்பிட்ட அந்த தோசை, எங்க அம்மா கொடுத்த இலவச கிரைண்டர்ல ஆட்டினது, அதுக்கு தொட்டுக்கிட்ட சட்னி, எங்க அம்மா கொடுத்த இலவச மிக்ஸியில அரைச்சது. அங்க உட்கார்ந்து வாங்குனீங்களே காத்து அது, எங்க அம்மா கொடுத்த இலவச ஃபேன்ல இருந்து வந்தது. இப்படி எங்க பாத்தாலும் அம்மாவின் சாதனைகள்தான்.

விஜயகாந்த் என்ன பேசுகிறார்னே தெரியமாட்டேங்குது. அவர் மனைவி பிரேமலதா  ஏதேதோ பேசுறாங்க. உங்க கல்யாணத்துல தாலி எடுத்துக் கொடுத்தது கருணாநிதி. அவரைப்போய் திட்டலாமா.. என்னம்மா பிரேமும்மா இப்படி பண்றீங்களேம்மா..? தேர்தலைப்பற்றி பேசும்போது மழை வருவதற்கு முன்,  மழை வருவதற்கு பின் என்று சொல்லலாம்.

நாலரை வருஷமா ஓடி ஒளிஞ்சிருந்தவங்க எல்லாம் இப்பதான் நானும் முதலமைச்சர்னு, நானும் ரவுடிதான் வடிவேலு கணக்கா ஓடி வர்றாங்க.  ஆனா அ.தி.மு.க மழை, புயல், வெள்ளம் எதுவந்தாலும் சமாளிக்கும்” என்று பேசினார்.

இந்த கூட்டத்தில்  உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், வக்ஃபு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply