நேபாள பிரதமர் அதிரடி

உண்மையான அயோத்தி இந்தியாவில் அல்ல என்றும் உண்மையான அயோத்தி நேபாள நாட்டில் தான் உள்ளது என்றும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் கடவுள் ராமர் இந்திய நாட்டில் பிறந்தவர் அல்ல என்றும் நேபாள நாட்டில் பிறந்தவர் என்றும் அவர் ஒரு நேபாளி என்றும் நேபாள பிரதமர் தெரிவித்துள்ளார்

அயோத்தி பிரச்சனை கடந்த பல ஆண்டுகளாக நீண்டு தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ள நிலையில் திடீரென நேபாள பிரதமர் இந்த பிரச்சனையை கிளப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் சீண்டும் வகையில் நேபாள பிரதமர் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply