மீஞ்சூர்: ஸ்ரீமந் நாராயண பிருந்தாவன ஆசிரமத்தில் உள்ள பகவத் ராமானுஜருக்கு, வைரமுடி பொருத்தும் விழா நடந்தது. மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு கிராமத்தில், ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீமந் நாராயண பிருந்தாவன ஆசிரமம் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பகவத் ராமானுஜரின், 998வது திருஅவதார மகோற்சவ விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. உ.வே. சுதர்சனாச்சாரியார் தலைமை யில், ராமானுஜர் உற்சவ வைபவங்கள், கடந்த 18ம் தேதி துவங்கி, நேற்று வரையில் நடைபெற்றது. நேற்று, பகவத் ராமானுஜருக்கு, வைரமுடி சாத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரமுடியை, ராமானுஜருக்கு பொருத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. அப்போது, விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. இந்நிகழ்ச்சியில், மீஞ்சூர், புங்கம்பேடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் பங்கேற்று, ராமானுஜரை வழிபட்டு சென்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.