ராமமோகன ராவிற்கு மீண்டும் பொறுப்பு
கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் வீட்டில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் செய்த சோதனையை அடுத்து தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் நீக்கப்பட்டார். தமிழக வரலாற்றில், தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும் ரெய்டு நடந்தது அதுவே முதல்முறை. அதுமட்டுமின்றி தமிழ்நாடு தலைமைச் செயலகத்திலேயே அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தியதும் அதுவே முதல்முறை
தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராமமோகன ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட சிலையில் தற்போது, அவருக்கு மீண்டும் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராமமோகன ராவ், மூன்றே மாதத்தில் மீண்டும் பதவியில் இடம்பெற்றுள்ளதை தலைமைச்செயலக அதிகாரிகள் வியப்புடன் நோக்கி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.