காத்திருப்போர் பட்டியலில் ராம்மோகன் ராவ். அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
தமிழக தலைமைச் செயலளராக இருந்த ராமமோகன ராவ் வீட்டில் நேற்று வரிமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது எடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பதவி வகித்த ராமமோகன ராவ் வீட்டில்,நேற்று வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. எனவே அவரை தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன
இந்த நிலையில் இன்று நண்பகல் கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு அறிவித்தது.இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து சஸ்பண்ட் செய்யப்பட்ட ராமமோகன் ராவ் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.