shadow

தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வரும் அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிட செப்டம்பர் 22ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், செப்டம்பர் 27ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி என்றும், தேவைப்பட்டால் அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது