ஷங்கரை முந்திவிட்ட ரஞ்சித். லைகா நிறுவனம் அதிருப்தி
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பும், எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ படத்தின் படப்பிடிப்பும் ஒரே நாளில் தொடங்கப்பட்டது. ஆனால் ‘பாகுபலி 2’ ரிலீஸ் ஆகி ரூ.1700 கோடியும் வசூல் செய்துவிட்டது. ஆனால் ‘2.0’ படத்தின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
முதலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் என்று கூறியவர்கள் அடுத்து 2018 ஜனவரி 25 என்று கூறினார்கள். ஆனால் தற்போது ஏப்ரல் மாதத்திற்கு இந்த படம் தள்ளிப்போகும் என தெரிகிறது.
இந்த நிலையில் ரஞ்சித் இயக்கி வரும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டது. மீதியுள்ள காட்சிகளும் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் என்பதால் இந்த படத்தை வரும் ஜனவரி 15, பொங்கல் திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ‘2.0’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்கொண்டே செல்வது லைகா நிறுவனத்தை அதிருப்தி அடைய செய்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.