shadow

shoe laceமத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசத்திற்காக தியாகம் செய்யும் ராணுவ வீரர் ஒருவரை தனது ஷு லேசை கட்ட வைத்து அவமரியாதை செய்துவிட்டதாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின்பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வுகள் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் பார்டரில் உள்ள கட்ச் என்னும் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது, அவர் அணிந்திருந்த ஷூவின் லேஸ்கள் எதிர்பாராமல் அவிழ்ந்துள்ளது. அதனால் ராஜ்நாத் சிங்கின் பாதுகாப்புக்கு சென்றிருந்த ராணுவ வீரர் ஒருவர் அவரது ஷூ லேஸை கட்டியுள்ளார்.

ராணுவ வீரர் ஒருவர் ஷூ லேஸ் கட்டும் காட்சிகளை அவருடன் சென்றிருந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.அந்த காட்சிகள் தற்போது ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது ஷூ லேஸை கட்ட ராஜ்நாத் சிங் உத்தரவிட்டாரா?, அல்லது அந்த வீரரே தாமாக முன்வந்து ஷூ லேஸை கட்டிவிட்டாரா? என்ற விவரங்கள் தெரியவில்லை.

ஆனாலும், தேசத்திற்காக உயிரையே கொடுக்கும் தியாகத்தை செய்யும் ராணுவ வீரர் ஒருவரை ராஜ்நாத் சிங் அவமதித்து விட்டதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பதால், இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1qM3Vz0″ standard=”//www.youtube.com/v/OXRaxna6WZU?fs=1″ vars=”ytid=OXRaxna6WZU&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep3909″ /]

Leave a Reply